ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

திடீர் மரணம்!!! தாயின் இறுதிக் கிரியைக்காக கனடாவில் இருந்து யாழ். வந்தவர்


தாயின் இறுதிக் கிரியைக்காக கனடாவில் இருந்து வந்தவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் யாழ். மல்லாகம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாயின் இறுதிச் சடங்கின் போதே இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ். மல்லாகம் கட்டுவன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட 2 பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய இராசையா பத்மவேல் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் உயிரிழந்த தனது தாயின் இறுதிக்கிரியைக்காக தனது மனைவியுடன் கனடாவில் இருந்து யாழ். வந்துள்ளார்.
இதையடுத்து தனது தாயின் உடலை மயானத்திற்கு எடுத்துச்செல்லும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இவருடைய இறுதிக்கிரியை இன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியத் தீவிரவாதிகளால் ஜேர்மனிக்கு பேராபத்து! எச்சரிக்கும் பத்திரிகையாளர்


அகதிகள் என்ற பெயரில் நுழையும் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் ஜேர்மனிக்கு பேராபத்து ஏற்பட உள்ளதாக பிரபல இஸ்ரேல் பத்திரிகையாளர் Zvi Jecheskeli தெரிவித்துள்ளார்.
சிரிய அகதிகள் என்ற பெயரில் ஐரோப்பாவிற்குள் நுழைந்து மற்ற இஸ்லாமியவாதக் குழுக்களுடன் தொடர்பு கொள்வது எவ்வளவு எளிது என்பதை அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
ஜேர்மனிக்குள் நுழைந்து அகதியாக புகலிடம் பெறுவதற்கு உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரே ஒரு சிரிய பாஸ்போர்ட் மட்டும்தான் என்று கூறும் Zvi Jecheskeli, தான் எவ்வாறு ஒரு இஸ்லாமியர் போல வேடமிட்டு ஜேர்மனிக்குள் எளிதாக நுழைந்தார் என்பதை விளக்குகிறார்.
உளவுத்துறை அலுவலர் ஒருவரின் உதவியால் இஸ்தான்புல்லில் உள்ள சிரிய சமூகத்தைத் தொடர்பு கொண்ட அவர், உண்மையானது போலவே தோற்றமளிக்கும் போலி சிரிய பாஸ்போர்ட் ஒன்றைப் பெற செலவழித்தது வெறும் 1250 டொலர்கள் மட்டுமே.
நம்புங்கள், சில நாட்களுக்குள் அவர் பெர்லினிலுள்ள சிரிய அகதிகள் முகாமொன்றில் இருந்தார்.



அங்கிருக்கும் பாலஸ்தீனிய சமூக ஆர்வலர் ஒருவர் எவ்வாறு Zvi Jecheskeli தனது குடும்பத்தை கடல் வழியாக திருட்டுத்தனமாக ஜேர்மனிக்குள் கொண்டு வருவது என்பதற்கான எளிய வழிமுறைகளைச் சொல்லிக்கொடுத்தார்.
Muslim Brotherhood என்னும் அமைப்பின் நீண்டகால உறுப்பினரான Yusuf al-Qaradawi என்னும் எகிப்திய இஸ்லாமியவாத இறையியலாளர் கூறிய “மீண்டும் இஸ்லாம் மேற்கத்திய நாடுகளையும் ஐரோப்பாவையும் ஆக்கிரமிக்கும்” என்னும் கூற்றை நினைவு கூறும் Zvi Jecheskeli, அகதிகள் என்ற பெயரில் நுழையும் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் ஐரோப்பாவுக்கு பேராபத்து ஏற்பட உள்ளது என்னும் எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்திருக்கிறார்.

இந்த எழுத்தில் உங்களது பெயர் ஆரம்பிக்கிறதா?!! ரகசியம் இதுதானாம்!


பெயரில் என்ன இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு அதனை அவ்வளவாக சட்டை செய்யாது செல்பவர்களா நீங்கள்? இந்த தகவல் உங்கள் எண்ணத்தை மாற்றிடும். ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னம்பிக்கை என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் வாழ்வதற்கும் வீழ்வதற்கும் அடிப்படையாய் அமைந்திருப்பது இந்த தன்னம்பிக்கை தான். ஆர் மற்றும் பி போன்ற எழுத்துக்களில் உங்களுடைய பெயர் ஆரம்பிக்கும்.இந்த பெயருடையவர்களைப் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
  • பெரும்பாலும் இவர்கள் துலாம் ராசிக்காரர்களாக இருப்பார்கள்.இவர்களுக்கு சூரியனின் ஆதிக்கம் நேரடியாக இருக்குமென்பதால் எப்போதும் நண்பர்கள் மற்றும் உறவுகள் சூழவே இருப்பார்கள். தனிமையை விரும்ப மாட்டார்கள். எல்லாரும் தன்னிடம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள். சின்ன சின்ன தவறுகளுக்கு கூட அதிகம் வருந்துவர்.
  • பிறரை ஈர்க்கும் தன்மை இவர்களிடத்தில் அதிகமுண்டு,அழகுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுப்பார்கள். தங்களையும் தங்களைச் சுற்றியும் அழகாகவெளிப்படுத்த நிறைய மெனெக்கெடுவார்கள். கலை விஷயங்களில் இவர்களுக்கு ஆர்வம் அதிகமிருக்கும்.
  • இவர்களுக்கு சூரியனின் நேரடி பார்வை கிடைப்பதால் சோர்வாக முடங்கியிருக்க நினைக்க மாட்டார்கள். நிறைய நண்பர் பட்டாளம் உண்டு. அதே போல குடும்ப உறுப்பினர்களை விட நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பர். உடல் நிலையில் அடிக்கடி எதாவது பிரச்சனை வந்து கொண்டேயிருக்கும்.
  • சமூகத்துடன் எப்போதும் நெருக்கம் பாராட்டுவீர்கள். சமூகத்தில் நடக்கிற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மனக்கவலை கொள்வீர்கள். எந்த சின்ன விஷயத்திற்கு சட்டென உணர்சிவசப்படக்கூடியவராக இருப்பீர்கள்
  • உடலுழைப்பு செய்ய விரும்ப மாட்டீர்கள். உங்களது மூளை அபாரமானதாக இருக்கும், மூளையின் செயல்பாடு வேகமாக இருக்கும் கணக்குப் புதிர்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உங்களது இருப்பு அனைவராலும் விரும்பப்படும்.
  • எல்லாவற்றிலும் நேர்த்தியிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பீர்கள். எல்லாமே கச்சிதமாக, சொன்ன நேரத்தில் சொன்ன வடிவத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். சட்டென கோபம் கொள்வதால் அடிக்கடி மனஸ்தாபங்கள் நிகழும். தங்களை அழகாக காட்டிக் கொள்ள நிறைய மெனெக்கெடுவார்கள். இசையில் அதிக ஆர்வமிருக்கும்.
  • இவர்களுக்கு கடவுள் பக்தி சற்று கூடுதலாக இருக்கும். பெரியவர்களின் அன்புக்கு பாத்திரமாக இருப்பார்கள் விளையாட்டில் ஆர்வமிருந்தாலும் உடலுழைப்பு செய்ய சோம்பல் படுவதால் விளையாட்டில் தடம் பதிக்க யோசிப்பார்கள்.
  • திருமண வாழ்க்கையில் அதீத இன்பம் வாய்க்காது. சண்டை சச்சரவுகளுடன் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும். இயற்கை தொடர்பான விஷயங்களை அதிகம் நேசிப்பர். அதிக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புவர்.
  • எந்த விஷயமாக இருந்தாலும் அதனை மனதில் தேக்கி வைக்கத் தெரியாது. அது நல்ல செய்தியாக இருந்தாலும் அல்லது மறைக்க வேண்டிய செய்தியாக இருந்தாலும் பொதுவில் சொல்லிவிட்டு பின் திண்டாடுவர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பர். தன்னிடத்தில் எதாவது சோகம் ஏற்பட்டிருந்தாலும் அதனை வெளிக்காட்டாது அமைதிகாப்பர்.
  • வாக்குவாதங்களை தவிர்ப்பது இவர்களுக்கு நல்லது. அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள். ஒன்று, வாக்குவதாத்தின் அடிப்படையான சாதுர்யப் பேச்சு மொழியறிவு இவர்களுக்கு சற்று குறைவு. அதோடு சட்டென அதிகமாக உணர்சிவசப்படுபவர்கள் என்பதால் அதனைத் தவிர்ப்பது நல்லது.
  • தாய்மை பொறுப்பையும் மிக கச்சிதமாக செய்வார்கள். குழந்தைகளை மிகவும் பொறுப்பான வகையில் வளர்த்தெடுப்பார்கள். அவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுப்பவராகவும், அவர்களை ஊக்கப்படுத்துபவராகவும் இருப்பர். இதனால் இவர்களின் குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு.
  • அவ்வளவு எளிதாக தங்களுடைய தன்னம்பிக்கையை இழந்து விட மாட்டார்கள். தோற்கும் போதெல்லாம் இன்னும் ஒரு முறை முயற்சித்து பார்க்கலாமா என்பது தான் இவர்களது அடுத்த கேள்வியாக இருக்கும். இந்த குணங்களை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நீங்கள் வாழ்வில் உயரமான இடத்தினை அடைவீர்கள்.

வியாழன், 15 பிப்ரவரி, 2018

அழகான பெண்ணின் உதடு பட்ட பாட்டை பாருங்கள்/ முத்தச் சிங்கங்கள் ஆண்கள்/ kiss by kiss feb14

சில ஆண்கள் பெண்களின் உதட்டை அப்படி செய்கிறார்கள்.காதலர் தினத்திற்க்கு அடுத்த நாளும் ,காதலர் தினத்தன்றும் ஒரு அழகான பெண்ணின் உதடு பட்ட பாட்டை பாருங்கள்.


இது இரு நண்பர்கள் தம் காதலிகளுடன் காதலர் தினத்தன்று செய்த வேலை.
அதில் என்ன கிருமி இருந்திச்சோ அட்டா னெக்ஸ்டு நாள் மொக்கை கிஸ் ஆண் கூட கொஞ்சம் காச்சலில் படுத்திருக்கிறார்.உதட்டோடு உதடு வைத்து எடுக்கவே இல்லையாம்,பார்த்த மற்ற நண்பர் ஒருவர் சொல்கிறார் இவர்களின் முத்தத்தால் தன் மனைவி கூட தன்னில் கடுப்பேறிவிட்டாளாம்.

எனென்றால் அவர்கள் உதட்டை எடுக்கும் போது நீங்களும் எடுக்கனும் எண்டு கண்டிஷனாம்.பிறகென்ன அவனோ முத்த கில்லாடி ..எடுக்கவே இல்லை உதட்டில கவிதை கவிதையா கொட்டுறான்,ஆனால் எனக்கோ மூச்சிரைக்குது ,என் காதலியோ, கண்டிஸ்ன்.என்னத்தை சொல்ல .ஒரு முடிவுக்கு பின்னேரம் 8 மணிக்கு வந்தான் நண்பன்.பாருங்க 2 மணித்தியாளம் சரியாக அப்டியே இருந்தாங்க.

உதடு வீக்கம் 2 நாள் மாரி தெரியலாம் ஆனால் 2 மணி நேரத்துக்கே இப்படியென்றால் யோசிச்சு பாருங்க என் நண்பனைன் திறமையை .ம்ம்

திங்கள், 12 பிப்ரவரி, 2018

விமானம் மாஸ்கோ அருகே விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் பயணித்த 71 பேரும் உயிரிழந்தனர்/Russian passenger plane crashes outside Moscow, killing 71

ரஷியா தலைநகர் மாஸ்கோவில் டொமொடெடொவொ விமான நிலையம் உள்ளது.
இந்த விமான நிலையத்தில் இருந்து ஆர்ஸ்க் நகருக்கு நேற்று சரடோவ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு ஏ.என். 128 ரக உள்ளூர் போக்குவரத்து விமானம் 65 பயணிகள் மற்றும் 6 விமான குழுவினருடன் புறப்பட்டது.

இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் ரேடாரில் இருந்து விமானம் காணமல் போயுள்ளது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி தொடங்கப்பட்டது.

இதனிடையே, மாஸ்கோ பகுதியில் உள்ள அர்குனோவோ கிராமத்தில் அந்த விமானம் விழுந்து நொருங்கியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அப்பகுதியில் மீட்புப்பணிகள் தொடங்கப்பட்டது. அந்த விமானம் வானில் இருந்து விழும்போதே தீப்பிடித்து எறிந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதனால் அதில் பயணித்த யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்புகள் இல்லை என கூறப்பட்டது.


இந்நிலையில், இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 71 பேரும் உயிரிழந்ததாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

Adsense in Tamil (AdSense) தமிழுக்கு அங்கீகாரம்-இனி தமிழிலும் கூகிள் அட்சென்ஸ்

கூகுள் நிறுவனத்தின் Adsense, Adword போன்ற வசதிகள் மூலம், இணையத்தில் வருமானம் பெற முடியும். அதில் இவ்வளவு காலங்களாக தமிழை கூகுள் நிறுவனம் புறக்கணித்து வந்த நிலையில், இலங்கை தமிழர் முயற்சியினால் இன்று தமிழ் சேர்க்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நடந்திருக்கிறது.நம் வெப்சைட்டில் பிற நிறுவனங்களின் விளம்பரங்களைப் போடுவதற்கு அனுமதி கொடுத்து, அதுக்கு அவர்களிடம் இருந்து கட்டணத்தைப் பெறுவது ஒரு வகையான வியாபார உத்தி. இதுக்கு நாம்தான் மார்கெட்டிங் செய்ய வேண்டும். வெப்சைட்களில் விளம்பரங்கள் ஆங்காங்கே வெளிவந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவை இந்த வகையைச் சேர்ந்தவை.

மற்றோர் உத்தி, நம் வெப்சைட்டின் சில பகுதிகளை அப்படியே கூகுளுக்கு வாடகைக்கு விட்டுவிட்டால், அவர்கள் அந்த இடங்களில் விளம்பரங்களை வெளியிட்டுக்கொள்வார்கள். நமக்கு அதுக்கான வாடகையும் கொடுப்பார்கள்.

கூகுள் மூலம் வெளிவரும் விளம்பரங்களில் Ads by Google, AdChoices, AdWords என்ற இணைப்பு வார்த்தைகள் இருப்பதைக் கவனியுங்கள். இதற்கு நீங்கள் மார்க்கெட்டிங் செய்ய வேண்டாம். கூகுள் அவற்றைப் பார்த்துக்கொள்ளும். உங்கள் சார்பில் மார்க்கெட்டிங் செய்து, விளம்பரம் பெற்று, அவற்றை உங்கள் வெப்சைட்டில் வெளியிட்டு, கட்டணமும் கொடுக்கும்.

ஆட்சென்ஸ் (AdSense) என்றால் என்ன?

கூகுள் கல்வி-மருத்துவம்-ஆராய்ச்சி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள் போன்றவற்றிடம் விளம்பரங்களை நல்ல விலைக்குப் பெறுகிறது. பிறகு வெப்சைட் வைத்திருப்பவர்களிடம், விளம்பரங்களுக்குத் தேவையான இடத்தை அவர்கள் அனுமதியுடன் எடுத்துக்கொண்டு, அதில் அந்த விளம்பரங்களை வெளியிடுகிறது. இதுக்கு ஆட்சென்ஸ் என்று பெயர்.

நம் வெப்சைட்டில் கூகுள் நிறுவனத்துக்கு இடத்தைக் கொடுத்து, விளம்பரங்களை வெளியிட நாம் அனுமதிக்கலாம். நம் அனுமதி இல்லாமல் கூகுளோ அல்லது வேறு எந்த நிறுவனமோ நம் வெப்சைட்டில் இடத்தை ஆக்கிரமிக்க இயலாது.

நம் வெப்சைட்டின் உள்ளடக்கத்துக்கு ஏற்ப பொருத்தமான விளம்பரங்களை கூகுள் வெளியிடுவதால், நம் வெப்சைட்டுக்கு வருகிற பார்வையாளர்கள் அந்த விளம்பரங்களையும் க்ளிக் செய்து பார்ப்பார்கள்.

ஒரு விளம்பரம் எத்தனை முறை க்ளிக் செய்யப்படுகிறது என்பதைக் கணக்கில் கொண்டு, அதற்கேற்ப நமக்கு வாடகை கிடைக்கும்.

இதில் உலகில் உள்ள பல மொழி இணையதளங்களுக்கும் உரிமம் கிடைத்து வந்த நிலையில், தமிழ் மொழியை மட்டும் புறக்கணித்து வந்தது. இதுவரை பல மில்லியன் வெப்சைட்டுகள் இதனால் முடக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், இலங்கை தமிழர் ஒருவர் எடுத்த முயற்சியினால் தமிழுக்கு அங்கீகாரம் கிடைத்து, இனி தமிழ் மொழி இணையதளங்களும் இதன் மூலமாக வருமானம் ஈட்ட முடியும். இனி இணையதளத்திலும் இதன் மூலமாக தமிழ் புரட்சி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


சனி, 10 பிப்ரவரி, 2018

என்னை ஜெயிலில் போடாமல், சுட்டுக்கொன்று விடுங்கள்' பிலிப்பைன்ஸ் அதிபர்

பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். போதைப் பொருள் கடத்தல்கார்களை கண்டதும் சுட்டுக் கொல்லுமாறு அவர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

ரோட்ரிகோ அதிபராக பதவியேற்றது முதல் சுமார் 4,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் போர் குற்ற நடவடிக்கை காலத்தில் நாள்தோறும் சுமார் 44 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளது.

இதுதவிர, ஆட்சி மற்றும் நிர்வாகரீதியாக பல்வேறு சீர்திருத்தங்களையும் அவர் மேற்கொண்டு வருகிறார். நாட்டின் பன்முகத்தன்மையை மாற்றி ஒருமுகப்படுத்தப்பட்ட மத்திய ஆட்சிக்கு அதிக அதிகாரம் அளிப்பதன் மூலம் அனைத்து மாகாணங்களிலும் சமச்சீரான ஆட்சி முறையை அறிமுகப்படுத்தவும் ரோட்ரிகோ டுட்டர்டே முயன்று வருகிறார்.

அவரது இந்த நடவடிக்கை நாட்டின் ஜனநாயகத்துக்கு ஆபத்தாக அமையும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் பிலிப்பைன்சில் நடத்தப்பட்ட கொலைகள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளதாக நீதிமன்ற வழக்கறிஞர் பெனுசவுடா கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார்.


இது குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நேற்று முன்தினம் பேசிய ரோட்ரிகோ, 'சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்னிடம் விசாரணை நடத்தலாம். இவ்வழக்கு குறித்து விசாரணை நடத்தும் போது நானும், பென்சவுடாவும் மட்டும் தான் இருக்க வேண்டும். நான் மனித இனத்திற்கு எதிராக குற்றங்கள் செய்தது நிரூபிக்கப்பட்டால் எனக்கு தண்டனை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. என்னை ஜெயிலில் போடாமல், சுட்டுக்கொன்று விடுங்கள்' என கூறினார்.

யாழ்ப்பாணத்தில், இரண்டு நகரசபைகளைக் கைப்பற்றிய சைக்கிள்!!!

நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சவகச்சேரி, பருத்துறை நகர சபைகளை சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி (தமிழ்தேசிய பேரவை) கைப்பற்றியுள்ளது.

இந்த தகவலை தேர்தல்கள் ஆணைக்குழு இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் தேர்தல் நடவடிக்கைக்குழு அதிகாரிகளை மேற்கோள்காட்டி எமது பிரதேச செய்தியாளர்கள் கூறியுள்ளனர்.

பருத்துறை நகர சபையில் ஆறு வட்டாரங்களையும் சாவகச்சேரில் ஐந்து வட்டாரங்களையும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றியுள்ளதாக பிரதேச செய்தியாளர்கள் கூறியுள்ளனர்.

அதேவேளை இந்த இரண்டு சபைகளையும் தமது முன்னணி கைப்பற்றியுள்ளதாக முன்னணியின் யாழ் மாநகர சபை மேயர் வேட்பாளர் மணிவன்னன் ஐ.பி.சி.தமிழ் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை யாழ் மாநகர சபை தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னணியில் உள்ளதாகவும் பிரதேச செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு முன்னிலையில் உள்ளதாகவும் பிரதேச செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாநகரசபையை கைப்பற்றியது கூட்டமைப்பு!!!

மட்டக்களப்பு மாநகரசபை யை கைப்பற்றியது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு.நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகரசபையினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றியிட்டியுள்ளனர்.அந்தவகையில் மாநகரசபைப்பிரிவில் 20 வட்டாரங்களில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என அறியக்கிடைக்கிறது.

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

சிங்களவர்களும் லண்டனில் தமிழரின் ஆர்ப்பாட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்துக்கு தயார் !!! உசார் தமிழர்களே..

இன்று தமிழர்கள் ஸ்ரீலங்கா தூதரகத்திற்கு முன்னர் ஆர்பாட்டம் நடத்த உள்ள நிலையில்.


 கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டிய சிங்களவன் தான் ஹீரோ என்று சொல்லி, சிங்களவர் அங்கே ஆர்பாட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதனால் பெரும் முறுகல் நிலை தோன்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழர்கள் பெரும் அளவில் திரண்டு உடனே செல்லவேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளார்கள். இது தான் சிங்களவர் அடித்து வெளியிட்டுள்ள போஸ்டர்.

செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

கள்ள காதலியுடன் வாலிபர் கையும் களவுமாக பிடித்த காதல் மனைவி.!!

சித்தூரை சேர்ந்தவர் ரமேஷ் என்பவர் மருத்துவராக உள்ளார். இவரும் ரம்யா என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நல்ல படியாக சென்ற இவர்கள் வாழ்கையில் ஒரு பெண்ணால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர் ரம்யா வசிக்கும் பகுதியில் வசித்த புவனேஸ்வரி என்பவர் ஆவார். ரம்யா கணவர் ரமேஷ் பணி புரியும் மருத்துவமனைக்கு புவனேஸ்வரி அடிக்கடி சென்றுவந்துள்ளார். இதனால் ரமேஷ்க்கும் புவனேஸ்வரிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இரண்டு வருட இடைவிடாத டொடர்பினால் வீட்டை மறந்தான் ரமேஸ்.கள்ள தொடர்பின் இனிப்பு அங்கேயே அவனை தங்க வைத்தது.இதனால் தன் காதல் மனைவியை விட்டு கள்ள கதலியுடன் வாழ ஆரம்பித்தான்.அதன் பின் காதல் மனைவி கண்டு பிடித்து செய்ய வேண்டிய பூஜையை கள்ள காதலிக்கு முன்பே ரமேஸ்கு செய்தாள்.

நம்ம பொண்ணுங்க எண்டா என்ன சும்மாவா...!!! பூஜைக்கு !!

ஆண்கள் எப்படி ஏமாற்றப்படலாம்???!! கள்ளக்காதல் வலையில்...

ஆண்களே!!!
#இது உங்களுக்காக,
உங்களை யாரவது பெண் மொபைலில் கதைக்க தூண்டுகிறாளா?
அப்படியானால் அவள் உங்களிடம் பணம் எதிர்பார்க்கிறாள்.

 #யாராவது பெண் பணம் அனுப்பியவுடன் பல நாட்களுக்கு அதாவது அப்பணம் முடியும் வரை உங்கள் அழைப்பை பொருட்படுத்தவில்லையா???
அப்படியானால் அப்பெண் பணத்துக்காக மட்டுமே உங்களிடம் பாசம் போல நடிக்கிறாள் அல்லது வீட்டு கஸ்டம் பற்றி சொல்கிறாள் என அர்த்தம்.

# யாரவது பெண் உங்களிடம் அதிகம் காம இச்சை தொடர்பாக மொபைலில் பேசுகிறாளா??? அப்படியானால் அவள் உங்களிடம் பலவீனம் காமம் என்பதை தெரிந்து வைத்திருக்கிறாள்.

# யாராவது பெண் நீங்கள் காம வசப்படும் பொழுது அல்லது ,அந்த நேரத்தில் ஏதாவது கேட்கிறாளா??? அப்படியானால் அவள் அதை கேட்பதற்க்காகவே காமவசப்படுகிறாள் ..அல்லது அப்படி கதைக்கிறாள்.

#யாராவது பெண் நீங்கள் எதையாவது வாங்கிக் கொடுத்தால் மட்டுமே உங்களுடன் சந்தோசமாக இருக்கிறாளா??? அப்படியானால் அவள் எல்லோருடனும் பொருளுக்காக பழகுபவள்.

#யாரவது ஒருத்தி உங்களை எப்போதுமே அவதானமாக இருக்கும் படியும்,ஊக்குவித்து,தன்னை தியாகம் பண்ணுகிறாளா?????
அவள் உங்களின் உண்மையான காதலி அவள் மனைவியாக அமைய ஏற்றவள்.





விசாவுக்காக வந்த விபரமில்லாத காதல் தோல்வி.தவிப்பில் தோழி!!!

ஏமாற்றம் ஏமாற்றம் எல்லாமே ஏமாற்றம்.பணம்,காதல் என்கிற நிறம் ,அதன் பின்னால் விசா பெறும் நோக்கம்.உங்களுடைய உணர்வுகள் தூண்டப்பட்டு எப்படி நீங்கள் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லப்படலாம்?இதோ ஒரு உறங்காத உண்மை.பெண்களே !!! ஆண்களே உசார்!!!!!.......இலங்கை பையனின் காதல் கூத்தும் விசா மேட்டரும்...

எங்களுடைய முதல் சந்திப்பின் போதே, அவன் தனக்கு விசா கிடைக்கவில்லை என்று உண்மையை என்னிடம் தெரிவித்தான். எங்கள் சந்திப்பிற்கு அச்சாரம் இட்ட இந்த விசா என்ற வார்தையை அன்று நாங்கள் பேசிக்கொண்டதோடு சரி அதன் பின்னர் நாங்கள் இருவரும் ஒருபோது பேசிகொண்டதில்லை.

அன்று தொடங்கிய எங்கள் சந்திப்பு நீடித்துக்கொண்ட சென்றது. இந்த சந்திப்பின் மூலம் நாங்கள் இருவரும் ஆழமாக ஒருவரையொருவர் காதலிக்க தொடங்கினோம். அவரது இதயத்தில் எனக்காக ஒரு இடம் இருப்பதையும், எனது இதயத்தில் அவருக்காக ஒரு இடம் இருப்பதையும் எங்கள் இருவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

எனக்குள் இதுபோன்ற ஒருவித மாற்றம் எழுந்ததே இல்லை. அவனை நான் பார்க்கும்போதெல்லாம் என் மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கும். கண்கள் இரண்டால் என் கண்கள் இரண்டால்”, “முன்பே வான் என் அன்பே வாஆகிய காதல் கீதங்கள் என் மனதுக்குள் ரீங்காரம் இசைத்து என்னை பரவசப்படுத்தும். என் மனதுக்கு அவன் எப்படி வந்தான் என்பதை நினைத்து கொண்டு படுக்கையில் இருக்கையில், வானத்து நட்சத்திரங்கள் ஒன்று திரண்டு எங்கள் இருவரின் உருவத்தை ஒன்றாக இணைத்து என் கண்களை கிரங்கடிக்கும்.

நாங்கள் இவருவரும் ஒருவரையொருவர் ஒன்றாக புரிந்துவைத்துக்கொண்டோம். அவன் ஒருபோதும் என் பெண்மையை பற்றி சந்தேகம் கொண்டது கிடையாது. அதுபோன்று எந்தவொரு செயலையும் செய்யவேண்டும் என என்னை கட்டாயப்படுத்தியது கிடையாது. எனது உணர்வுகளுக்கு மதிப்பளித்தான்.

எங்கள் இருவருக்குள்ளும் இணைபிரியாத ஒரு பந்தம் உருவானது. இதனால் எங்கள் இருவரையும் யாராலும் பிரிக்க முடியாது என்பதை உணர்ந்தேன். 4 மாதங்கள் கடந்தது. ஒரு நாள் என்னிடம் ஒரு கேள்வியை எழுப்பினான். என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? இந்த கேள்வியை கேட்டதும் நான் அதிர்ச்சியில் உறைந்தேன்.

ஏனெனில், நாம் சந்தித்து 4 மாதங்கள் தான் ஆகிறது. அதுவும் இல்லாமல் இதனை அறிந்தால் எனது பெற்றோர் என்ன சொல்வார்களோ என்று. எனது வயது 19, அவனின் வயது 26. எந்த ஒரு தமிழ் தாயும் 19 வயதுடைய தனது மகளை தனியாக வெளியில் அனுப்ப அனுமதிக்கமாட்டார்கள். அதோடு எனக்கும் அவருக்கும் 7 வயது வித்தியாசம்.

ஆனால், “காதலுக்கு வயதில்லைஎன்று சொல்வார்கள். அதுதான் என் வாழ்வில் நடந்தது. அவர் எந்த அளவுக்கு எனக்கு பொருத்தமாக இருக்கிறார் என்பதை பற்றியெல்லாம் நான் சிந்திக்கவில்லை. அவன் மீதுள்ள அளவுகடந்த அன்பே, என்னை இப்படியெல்லாம் சிந்திக்க தூண்டிது. இருப்பினும் இந்த சிறுவயதில் திருமணம் செய்துகொள்ள வேண்டுமா என்ற கேள்வி என் மனதுக்குள் எழுந்தது.

நான் பட்டப்படிப்பு முடிக்க வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்குள் இருந்தது. ஆனால் அவனின் நோக்கம் எல்லாம் ஒன்று தான், என்னை திருமணம் செய்துகொள்ளவேண்டும், அதன் மூலம் அவனுக்கு விசா, பட்டப்படிப்பு, வேலை, பணம் ஆகிய அனைத்தும் கிடைக்க வேண்டும்.

சொல்லப்போனால், அவனின் கண்களுக்கு நான் Golden Ticket போன்று தெரிந்துள்ளேன். நாங்கள் இருவரும் காதலிப்பதை அவனது பெற்றோரிடம் சென்று, நான் தான் தெரிவிக்க என்று என்னிடம் கேட்டுக்கொண்டான். மேலும் எனது பெற்றோரிடமும் வந்து முறைப்படி என்னை பெண் கேட்பதிலும் அவன் பின்வாங்கினான்.

விசா என்ற போர்வையில் காதல் நாடகமாடிய அவனின் சுயரூபம் எனக்கு தெரியவந்தது. இவனுக்கு எப்போது விசா கிடைப்பது? எப்போது தொழில் கிடைப்பது? இவை இருந்தால் தான் எனது பெற்றோர் இவனை மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்வார்கள். இவனின் விருப்பமும் இலங்கைக்கு செல்வதில்லை, மாறாக வெளிநாட்டிலேயே வசிக்க வேண்டும், அதற்கு என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான்.

அவனுக்கு உண்மையாக இருந்தேன், அவன் இல்லாமல் என்னால் வாழ முடியாத என்பதை உணர்ந்தேன், ஆனால் என்னுடைய உணர்வுகளோடு விளையாடிய அவனை மறப்பதை தவிர எனக்கு வேறு வழிதெரியவில்லை. அதனால் அவனை கைவிட்டு எனது பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டேன். இந்த காதலின் மூலம் நேர்மறையான எண்ணங்களை கற்றுக்கொண்டேன். அந்த எண்ணங்களோடு பயணிப்பதால் எனது வாழ்க்கை தற்போது நன்றாக இருக்கிறது.

இதன் மூலம், விசா இல்லாமல் வெளிநாட்டில் வசிக்கும் ஆண்களுக்கும் ஒன்று கூறிக்கொள்கிறேன், உங்களுக்கு எதிர்காலம் இங்கு இல்லை என்று நான் கூற வரவில்லை. ஆனால் விசா கிடைக்க வேண்டும் என்பதற்காக, எந்தவொரு பெண்ணின் உணர்வுகளோடும் விளையாடதீர்கள். இலங்கையில் எவ்வளவோ அழகான பெண்கள் வசிக்கிறார்கள், அங்கு சென்று உங்களுக்கு பிடித்த பெண்களை திருமணம் செய்துகொள்ளுங்கள்.


ஆனால், அதற்கு பதிலாக என்னை போன்று பெண்களின் அழகான இதயத்தை நொறுக்காதீர்கள்.எனது இந்த கதையினை வெளிநாட்டு பெண்கள் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். விசா இல்லாத ஆண்களின் காதல் வலையில் ஒருபோதும் விழுந்துவிடாதீர்கள், ஏனெனில் உங்களை பயன்படுத்தி அவர்கள் விசா பெற்றுவிட்டார்கள் என்றால் உங்களை விட்டு பிரிந்துசென்று விடுவார்கள். இறுதியில் நீங்கள் தான் மன நிம்மதி இழந்து தவிப்பீர்கள்.

அபாயம் ,ரயிலில் மிதிபலகையில் பயணித்தவர்களுள் நால்வர் பலியாகியுள்ளனர்



காலி நோக்கி பயணித்த புகையிரதத்தில் பாரவூர்தி மோதி இடம்பெற்ற விபத்தில் மிதிபலகையில் பயணித்தவர்களுள் நால்வர் பலியாகியுள்ளனர்.குறித்த விபத்து அங்குலான துனாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

வியாழன், 25 ஜனவரி, 2018

கியர் எங்கே போகிறது நதியைத்தேடி!!! அதிசயமான பஸ் ஓட்டி ,கியர் போடும் அருமையான காட்சிகள்.இப்படியுமா???

சில ரைவர்கள் இருக்கிறார்கள் பெண்களை அருகிலிருத்தி அதாவது தமக்கு சற்று  பக்கமான இருக்கையில் இருத்தியோ,அல்லது தவறுதல்லாக யாரும் பெண் இருந்தாலோ சரி பாடு,அண்டு முழுக்க பஸ்ஸில் ஏறிய பிரயாணிகள் பாடு திண்டாட்டம் தான்.ஆனால் இவரோ கியருக்கு நடுவாக இருக்கையினை போட்டுள்ளார்.சரி வீடியோவையும் கிளிக் பண்ணி நீங்களும் பாருங்கள்.இப்படி மலைப்பகுதியில் கூட கியர் போட மாட்டீர்கள்.கீழே வீடியோ லிங்குகியர போடுங்க
https://www.facebook.com/tamildubsmashgalatta/videos/2127335927494736/




புதன், 24 ஜனவரி, 2018

மணப்பெண் காதலருடன் ஓட்டம்,தாலியுடன் மாப்பிள்ளை கொண்டாட்டம்,மாப்பிள்ளை வீட்டார் ஆர்ப்பாட்டம்,8 லட்சம் சேதாரம்

திருமணத்துப் பெண், தாலி கட்டிய சில நிமிடங்களில் கட்டிய தாலியை அவிழ்த்து மாப்பிள்ளையின் கைகளில் கொடுத்துவிட்டு காதனுடன் ஓட்டம் பிடித்ததும், அதற்காக மாப்பிள்ளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்

திரிச்சூர் மாவட்டம் மல்லச்சேரியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், இளைஞருக்கும் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் கேரளத்து வழக்கப்படி திருமணம் நடந்தது. தளி கட்டிய பிறகு புதுமண தம்பதியினர் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த வேறொரு இளைஞரைக் கண்டு உணர்ச்சியடைந்த மணப்பெண், தாலியை அங்கேயே கழட்டி மாப்பிள்ளையிடம் கொடுத்துவிட்டு வரிசையில் இருந்து வெளியேறினார். பின்னர் அந்த இளைஞரை தனது காதலர் என அறிமுகப்படுத்திய இளம்பெண், தங்களது திருமணத்திற்கு தன் வீட்டில் அனுமதி தரவில்லை. எனவேதான் திருமணம் வரை காத்திருந்தேன். இனிமேல் என்னை யாராலும் தடுக்க முடியாது என்று கூறிவிட்டு காதலருடன் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இதைத் தொடர்ந்து இரு வீட்டாருக்கும் இடையே கோவிலுக்குள்ளேயே குடுமிப்பிடி சண்டை நடக்க, போலீசார் வரவழைக்கப்பட்டு அங்கேயே பஞ்சாயத்தும் அரங்கேறியது. நடந்த சம்பவத்திற்கு இழப்பீடாக மணமகன் வீட்டார் 15 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். பெண் வீட்டார் பேரம் பேசி 8 லட்சம் வரை கொண்டுவந்தனர். பணம் கொடுத்ததற்கு பிறகு இரு வீட்டாரும் களைந்து சென்றுவிட்டனர்.

எப்படியோ பிரச்சினை தீர்ந்தது என நினைத்தால், அது சமூகவலைத்தளங்களில் பெரிய பஞ்சாயத்தாக மாறிக்கொண்டிருந்தது. இச்சம்பவம் குறித்து காரசார விவாதங்கள் நடக்க, சிலர் அந்த பெண்ணை பாராட்ட, சிலர் திட்ட, இடையில் பலரும் மணமகனின் பரிதாபங்களைக் கண்டு வருத்தம் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.


தன் வீட்டில் வரவேற்பிற்க்காக வைத்திருந்த கேக்கை மாப்பிள்ளை வெட்டிக் கொண்டாடினார் .காரணம் வேறு ஆணுடன் காதல் வயப்பட்டவள், எப்படியும் என்னுடன் மனக்கசப்புடனேயே வாழுவாழ் என்பதே.ஆகவே ஓடிப்போனது மிக நல்லது.

நம்புவதற்க்கு சத்தியமே இல்லை!!! ஆனால் விளக்கமுமில்லை!! ஆனால் மஜிக்


வாருங்கள் பார்க்கலாம்.நானும் பார்க்கிறேன் இதை எப்படி செய்கிறார்கள் என்று.மோதிரம் எவ்வாறு கைமாறுகின்றது???
கபே வெறும் பேனியிலிருந்து எப்படி வருகிறது??
மிகக் கடினம் ..நம்பவே முடியாது,ஆனால் உங்களுடைய மூளையிலும் சில கள்ள வளிகள் தெரியலாம்.பாருங்கள் அனுபவியுங்கள்

உலகப் பிரபல்யமான மஜிக்குகளை எப்படி செய்கிறார்கள்??? உலகக் கேள்வி.

வாருங்கள் பார்க்கலாம்.உலக மகா மஜிக்குகளை எப்படி செய்கிறார்கள் .எப்படியெல்லாம் மனிதர்களை ஏமாற்றலாம்.நாம் எப்படியெல்லாம் ஏமாறுவோம் என பார்ப்போம்.இங்கே 7 விதமான மஜிக் சோக்களை கண்டு கொள்ளுங்கள் .அவை எப்படி என நீங்களும் செய்துபாருங்கள் விரும்பினால்.மஜிக்கை செய்பவர்கள் எப்படியான விளக்கங்களை செய்கிரார்கள் என பாருங்கள்.மிகவும் எளிதானது ஆனால் எமக்கு விளக்கம் தெரியாமல் பார்ப்பதால் ஏதோகடினமானது,அல்லது சிக்கலானது போல இருக்கின்றது.

நம்பவே மாட்டீர்கள், இப்படியெல்லாம் எப்படி??

பார்க்க முடிந்தால் பாருங்கள் நம்பவே மாட்டீர்கள்.மிக அரிய 10 விநோத செயல்கள்.கரின் கீழ்பக்கத்துக்கால் உள்ளே சென்று காரை இயக்கி மொரட்டுத்தனமாக கால் கீழே தொங்க தொங்க ..இப்படி பல.

கணனி பிரயோகத்தில் சுட்டி பயன்பாடு 1985 எப்படி என விளக்கம்ளிக்கும் அரிய காட்சி

http://bit.ly/2kULRoW
நாம் இப்போது பயன் படுத்தும் கணனியை விட ஆரம்பகாலத்தில் எவ்வளவு சிரமம் இருந்திருக்கும் என்பதனை மேலே உள்ள இணைப்பை அழுத்தி வீடியோவை திறந்து பாருங்கள்.இதை பார்க எப்படி இருக்கிறது தெரியுமா???
ஒரு செயலை கணனி இயக்க 32 பிட்டு செயலகமே பயன்பட்டது ,அது மட்டுமல்ல அனிமேசன் எவ்வாறன நிலையில் இருந்தது என யோசித்து பாருங்கள்.

கள்ளக் காதலன் தன் காதலியின் உள்ளாச படத்தை கணவனுக்கு அனுப்பி மிரட்டல் - குழப்பம் தீர்ந்தது

குடும்பதகராறு காரணமாக வாசுதேவனும் அவர் மனைவி பிரியதர்ஷினியும் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.


இந்நிலையில் பிரியதர்ஷினிக்கும் பாலமுருகன் என்பவருக்கும் கள்ளதொடர்பு ஏற்பட்டுள்ளது.

பிறகு பாலமுருகன் பிரியதர்ஷினியின் ஆபாச படத்தை வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் வெளியிடுவேன் என்று வாசுதேவனிடம் கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.


இதற்கு பயப்படாத வாசுதேவன் பணம் தர முடியாது என மறுத்துள்ளார்.


ஆத்திரமடைந்த பால முருகன் பிரியதர்ஷினியுடன் உல்லாசமாக இருக்கும் புகைப்படத்தை வாட்ஸ் அப்மூலம் வாசுதேவனின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார்.

பல்கலைக்கழக மாணவனுடன் ஓடிய சுவிஸ் மனைவி-கணவனும் பிள்ளைகளும் ஏக்கம்!!!

ஆன்ரியின் லீலைக்குள் மாட்டிய பையன்.
தனது கணவனையும் இரு பிள்ளைகளையும் கைவிட்டு விட்டு சுவிஸ்லாந்தில் இருந்த இலங்கை வந்துள்ளார் காரைநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர். 

குறித்த பெண் மிருசுவில் பகுதியைச் சேர்ந்த 24 வயதான கொழும்பு பல்கலைக்ககழகத்தில் கல்விபயிலும் மாணவன் ஒருவனுடன் வைபர் மூலம் தொடர்பில் இருந்ததாகத் தெரியவருகின்றது.
இது தொடர்பாக கணவன் சுவிஸ்லாந்தில், குறித்த பெண்ணுடன் முரண்பட்டு தாக்கியதாகவும், அப்பெண் கணவனை பொலிசாரிடம் சொல்லி கைது செய்து சிறைக்குள் வைத்ததாகவும் தெரியவருகின்றது. கணவன் சிறையிலிருந்து வந்தவுடன் மனைவி தனது பிள்ளையையும் கணவனிடம் விட்டு விட்டு யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

 குறித்த பெண்ணின் சகோதரர்கள் இது தொடர்பாக சந்தேகம் அடைந்து கணவன் பொய் சொல்கின்றார் என நினைத்து கணவன் சொன்ன தகவல்களை வைத்து தனது சகோதரியைத்,தேடிய போது கணவன் சொன்னவை அனைத்தும் உண்மை என அறிந்துள்ளனர்.


தற்போது கணவராலும் பெண்ணின் உறவினர்களாலும் குறித்த பெண்ணை தன்னுடன் வைத்திருக்கும் பல்கலைக்கழக மாணவனுக்கு எதிராக பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.அதாவது தனது மனைவியை குறித்த மாணவன் கட்டாயப்படுத்தி கடத்தி வைத்துள்ளதாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய், 23 ஜனவரி, 2018

பிள்ளையுடன் வந்த காதலி,மணமகன் ஓட்டம் (புதுக்கல்யாணத்துக்கு)

தரகர் மூலம் மறைத்து புது கல்யாணம் செய்து,கோவில் திருணம் முடிந்து ஊர்வலாக ஆட்பர கார் ஒன்றில் மணமகளுடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த மணமகன், திடீரென காரின் கதவை திறந்து ஓட்டமெடுத்துள்ளார். இதனால் மணப் பெண் அதிர்ச்சியடைந்தார்.


வீட்டில் வரவேற்பதற்காக காத்திருந்த உறவினர்கள், அயலவர்கள் எல்லோரும் மணமகன் (மாப்பிளை) காரில் இருந்து இறங்கி ஏன் ஓடுகின்றார் என தெரியாது பதற்றமடைந்தனர்.

மாப்பிளை ஓடும்போது கைக்குழந்தை ஒன்றை கையில் தாங்கியிருந்த பெண் ஒருவர் அவனை பிடியுங்கள்என உரக்க சத்தமிட்டபோதுதான் எல்லோருக்கும் விடயம் தெரியவந்த்து.
மாத்தறை மாவட்டத்தின் புறகர் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

கோவிலில் திருமணம் முடிவடைந்து மணமகனும் மணமகளும் விருந்துபசாரத்துக்காக மணமகளின் வீடு நோக்கி ஊர்வலமாக திரும்பிக் கொண்டிருந்தனர். வீடு நெருங்கியதும் மணமக்களின் கார் மெதுவாக நகர்ந்து கொண்டு சென்றது.

மணமக்களை வரவேற்பதற்காக உறவினர்கள் மணமகளின் வீடுக்கு முன்பாகவும் வீதிக்கு அருகிலும் காத்திருந்தனர். அப்போது மணமகன் திடீரென கார்க் கதவைத் திறந்து எட்டிப்பார்த்தார். மணமகளின் வீட்டுக்கு அருகில் தனது மனைவி கைக்குழந்தையுடன் நிற்பதைக் கண்டார்.

இதனால் செய்வதறியாது பதற்றமடைந்த மணமகன் காரில் இருந்து இறங்கி ஓட்டமெடுத்தார். அப்போது உறவினர்கள், அயலவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மணமகனுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்து விட்டதாக எண்ணி மணமகளின் பெற்றோர் குழப்பமடைந்தனர்.

காருக்குள் இருந்த மணமகள் அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்தார். மணமகன் ஓடியபோது கைக்குழந்தையுடன் அங்கு நின்ற பெண் ஒருவர் சத்தமிட்டு அழுதவாறு, ”அந்தக் கள்ளனை பிடியுங்கள்எனக் கூறிக் கொண்டு, காரில் இருந்து இறங்கிய ஓடிய மணமகனை துரத்திச் சென்றார்.

அப்போதுதான் உறவினர்களுக்கும், அயலவர்களுக்கும் நிலைமை தெரியவந்தது. மணமகன் ஏற்கனவே திருணம் முடித்தவர் என்றும் அதனை மறைத்து இந்த திருமணத்தை செய்துள்ளார் எனவும் அறிந்துகொண்டனர். மணமகனின் மனைவியும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை அங்கு நின்றவர்களிடம் எடுத்துச் சொன்னார். மணமகனை துரத்திப் பிடித்த அயலவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.


மணப்பெண் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். இந்த பேச்சுத் திருமணத்தை ஒப்பேற்றிய கலியாணத் தரகரும் கைது செய்யப்பட்டுள்ளார்

மணப்பெண் ஓட்டம்!!! மாப்பிள்ளை காட்டம்!!!


இந்தியாவில் திருமணநாளான் அன்றிரவே கணவர் வீட்டிலிருந்து ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை சுருட்டி கொண்டு மணப்பெண் ஓட்டமெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்த ஷ்யாம் பாபு என்பவருக்கும் தேவரியா மாவட்டம் சரோஜினி நகரைச் சேர்ந்த இளம் பெண்ணிற்கும் கடந்த 23-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்து மறுநாள் காலை, மணப்பெண்ணை எழுப்புவதற்காக மாப்பிள்ளை வீட்டார் சென்றுள்ளனர்.

வீடு முழுவதும் தேடியும் அவர் இல்லாததால் அறையை சோதனையிட்டுள்ளனர், அப்போது தான் பெட்டியும், ரூ.2.5 லட்சம் மதிக்கத்தக்க நகையும் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

அவளுடைய போனுக்கு தொடர்பு கொண்ட போதும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை வீட்டார் பொலிஸ் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.


இந்த வழக்கு குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது..

மாப்பிள்ளைக்கு அல்வா!!!


தமிழகத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த காதலன் மணப்பெண்ணுடன் ஓட்டம் பிடித்தால் அங்கு பரபரப்பு நிலவியது.வேலூர் மாவட்டம் திருவலம் பகுதியைச் சேர்ந்தவர் யுரேஷியா. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவருக்கு, அவரது குடும்பத்தினர் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.அதன்படி மாப்பிள்ளை பார்க்கப்பட்டு, அங்குள்ள திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து மறுநாள் காலை 3 மணியளவில் நலங்கு வைப்பதற்காக மணமகனுக்கு சடங்குகள் நடத்தியுள்ளனர். அதைத் தொடர்ந்து மணமகளுக்கு சடங்குகள் வைப்பதற்காக, மணமகள் அறைக்குச் சென்று பார்த்த போது, அங்கு மணமகள் இல்லாததைக் கண்டு பெற்றோர் அதிர்ந்தனர்.

இதனால் மணமகளை மண்டபம் முழுவதும் தேடிய போதும் அவர கிடைக்காததால், வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த இளைஞர் ஒருவரின் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.அதன் பின் விசாரித்த போது, அந்த இளைஞரின் பெயர் வெங்கடேசன் என்றும் அவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.வெங்கடேசனும் யுரேஷியாவும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.

திடீரென்று பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்ததால், யுரேஷியா திருமண வரவேற்பு நிகழ்ச்சி அன்று வெங்கடேசனுடன் சென்று லத்தேரியில் உள்ள பெருமாள் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டு, காவல்நிலையத்தில் தஞ்சம அடைந்துள்ளார்.இருவரும் மேஜர் என்பதால், பொலிசார் வேறுவழியின்றி காதலனுடன் மணப்பெண்ணை அனுப்பி வைத்தனர்