சனி, 9 டிசம்பர், 2017

இடைத்தேர்தலை இடையில் விட்ட விஷால்


நடிகர்விஷால் அண்மையில் ஆர் கே நகரில் போட்டியிட முடிவுசெய்து வேட்புமனு தாக்கல் செய்தார்,அவரது கஸ்டகாலம் என்றுதான் சொல்ல வேண்டும் ,அது நிராகரிக்கப் பட்டு விட்டது.இருந்தாலும் சீறிப்பாயும் சிங்கமாகிய அவர் ஓய்ந்த பாடில்லை,மீடியாக்கலும் அவரை விட்ட பாடில்லை.தயாரிப்பாளர்சங்கம்,நடிகர் சங்கம் என எல்லாமே அவருக்கு எதிராக திரண்டது போல ஒரு தோற்றம் வேறு.இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது இடையில் விஷால் விட்டாரா இடைத்தேர்தலை என எண்ணத்தோன்றுகின்றது.

ஞாயிறு, 11 ஜூன், 2017

என்ன அருமை !!! 91 வயது ஆச்சியின் உடற்பலமும் பயிற்சியும். - வீடியோ இணைப்பு

91 வயசு முதிய ஆச்சியின் வியத்தகு உடற்பயிற்சியினை பாருங்கள் .என்ன அருமை.இதை பார்த்தாவது தொப்பை உள்ள 30 வயது பெண்களே சிந்தியுங்கள்.இவரின் வயசு 91,ஆனால் இன்னும் இளமையான பலம் கொண்டு இப்படி ஆரோக்கியமாக வாழக் காரணம் இந்த ஆச்சியின் உடற்பயிற்சியே.
அதுமட்டும் அன்றி பார்ப்போர்க்கு முன்னுதாரணமாக திகளும் இந்த வயதுமுதிர்ந்த ஆச்சியை எமது ஆச்சிகள் கூட பின்பற்றலாம்.ஏதோ வயது வந்துவிட்டது கிழப்பருவம் என்று நினைக்காமல்,உங்களால் முடியும் என யோசியுங்கள்.பொல்லுப்பிடிக்காமல் நடக்க ஆவது முடியும் இவரின் பயிற்சியையும் விடா முயற்சியையும் நீங்கள் பின்பற்றினால்.சாதனை செய்ய வயசு என்ன...ஒரு தடையே இல்லை என்பதற்க்கு இவர் ஒரு நல்ல முண்ணுதாரணம்.

வியாழன், 1 ஜூன், 2017

இலங்கையில் பிளாஸ்டிக் கோழிமுட்டைகள்!

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் கோழிமுட்டைகள் விற்பனையில் முறைகேடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிளாஸ்டிக் முட்டைகள், காலாவதியான முட்டைகள் என்பவற்றை விற்பனை செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதிலிருந்து பாதுகாப்பாகவும், விழிப்பாகவும் இருக்குமாறு தென்கிழக்கு சுகாதாரப் பேரவை துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.


அம்பாறை மாவட்டப் பிரதேசங்களில் தற்போது போலி முட்டைகள், அதாவது பிளாஸ்டிக் முட்டைகள் மற்றும் காலாவதியான முட்டைகளும் தாராளமாக கிடைக்கின்றன, என்றும், முட்டைகளை வாங்கும் போது அவதானமாக இருக்குமாறும் அந்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

புதன், 31 மே, 2017

இன்னொரு பூமிக்கு செல்ல றெடியா?.இதோ 2வது பூமி ரெடி/ Supper Earth

உயிரினங்கள் வாழ தகுதியுள்ள பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 21 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. உயிரினங்கள் வாழ தகுதியுள்ள பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு லண்டன்: விண்வெளியில் சூரிய குடும்பத்துக்கு வெளியேயும், அருகேயும் பல புது கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தற்போது பூமியை போன்று ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பூமியை போன்று உயிரினங்கள் வாழும் தகுதி படைத்தது. அது பூமியில் இருந்து 21 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இதன் மேல் பகுதியில் திரவ நிலையில் தண்ணீர் உள்ளது.
 இது பூமியை விட 2 அல்லது 3 மடங்கு பெரியது. இதன் ஓரத்தில்ஜிஜே 625’ என்ற நட்சத்திரமும் உள்ளது. உயிரினங்கள் வாழத்தகுதியுள்ள இந்த கிரகத்தை கனாரி தீவுகளில் உள்ளஇன்ஸ்டிடியூட் டி ஆஸ்ட்ரோ பிசியா டி கனாரீஸ்நிறுவன விஞ்ஞானிகள் இதை கண்டுபிடித்துள்ளனர்.
 இதன்மூலம் சூரிய குடும்பம் அருகேயுள்ள வாழத் தகுதியுள்ள 6-வது கிகரமாகவும் பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகமாகவும் இது கருதப்படுகிறது.
பூமியைக் காட்டிலும் 1.4 மடங்கு பெரிதாகக் காணப்படும் இந்தக் கிரகம், சுமார் 39 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கிறது. இதற்கு 'GJ 1132b' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தக் கிரகத்தை 'சூப்பர் எர்த்' என்று விஞ்ஞானிகள் வர்ணித்தனர். இதைச் சுற்றி பல அடுக்குகளாக வாயுகள் உள்ளன. இவை தண்ணீராகவோ அல்லது மீத்தெய்ன் அல்லது இரண்டும் கலந்த கலவையாகக் கூட இருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.

நம்முடைய சூரியக் குடும்பத்திற்கு அப்பாலுள்ள கிரகங்களில் உயிரினங்களைக் கண்டுபிடிக்க நாம் மேற்கொண்டிருக்கும் முயற்சிக்கு இத்தகைய புற வாயுப் படலங்கள் மிக முக்கியமானதாகும் என்று விஞ்ஞானி டாக்டர் ஜோன் சவுத்வொர்த் தெரிவித்தார்.


எனினும், இங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான வழியுண்டு என்று நாம் இப்போதைக்கு ஒரு முடிவுக்கு வந்து விடமுடியாது. ஏனெனில் இந்தக் கிரகம் பூமியைவிட பல மடங்கு வெப்பமானதாக தென்படுகிறது என்று அவர் சொன்னார்.

பழமொழிகளும் எம் தமிழும்

உண்மையில் பழமொழிகள் எம் விஞ்ஞானம் என்று நாம் பெருமைப்படும் அளவுக்கு சிறப்பு வாய்ந்த சுருக்க விளக்கங்களாக தொன்று தொட்டு இருந்து வருகின்றன.மனோவியல் தொட்டு இயற்க்கை விஞ்ஞானம் வரை சமூக  விழுமியங்களுக்குள் ஊடுருவிய ஒரு நவீன கரு தான் பழ மொழி.

நவீன சமூகமே பலதையும் சுருக்கமாக விளங்கும் விதத்தில் இருப்பதனால் ,எமது பழ மொழிகளை,பழ மொழி என்பதா அல்லது நவீன உரையாடல் மொழி என்பதா என எனக்கு தோன்றுகின்றது.

எது எப்படி ஆயினும் சில பழ மொழிகளையும் அதன் விளக்கங்களையும் பார்ப்போம்.


நிறைகுடம் நீர் தளும்பாது
பொருள்
குடம் நிறைய  நீர்  இருக்கும் போது நீர் சலசலத்து வெளியே சிந்தாது.
அறிவு நிறைந்தவர்கள் சளசளவென்று நிறைய பேச மாட்டார்கள் என்ற பொருளில் சொல்லப்பட்டது.

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்.
பொருள்
ஒரு மஹாகவியின் தாக்கம் அவர் வீட்டில் உள்ள பொருட்களிலும் பயிலும் என்பது செய்தி. அதாவுது, கம்பர் பாட்டால் தாக்குண்டு இன்னும் எழுதப் படாமல் காலியாக உள்ள கட்டுத் தறிகளும் கூட கவிபாடும்.
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி.
பொருள்
ஆண்டி என்பது ஒரு சிவனடியார் பெயர். அவன் காலையில் எழுந்ததும் சேகண்டியை அடித்துச் சங்கினை ஊதிக்கொண்டு உணவுக்காகப் பிச்சை எடுக்கக் கிளம்புவான். இளைப்பாறக் கோவில் திண்ணை அல்லது மடம். இப்படி ஓர் ஆண்டியை இரண்டு திருடர்கள் ஒருநாள் இரவு கூட்டாகச் சேர்த்துக்கொண்டு ஆடு திருடச் சென்றனர். ஆட்டுக்கிடையில்க் கீதாரிகள் என்றும் கீலாரிகள் என்றும் அழைக்கப்படும் இடையர் தலைவர் இருவர் காவல் காத்துக்கொண்டு குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தனர். இரண்டு திருடர்களும் ஆளுக்கு ஒரு ஆட்டைத் தூக்கித் தோளில் போட்டார்கள். ஆடுகள்மேஎன்று கத்த ஒரு திருடன், ’சங்கைப் பிடிடா ஆண்டிஎன்று சொன்னான். அவன் சொன்ன சங்கு ஆட்டின் கழுத்து. ஆண்டி பழக்கதோஷத்தில் தன் சங்கை எடுத்து ஊத, கீலாரிகள் விழித்துக்கொண்டு திருடர்களைப் பிடித்துவிட, ஆண்டி தப்பித்தான்!

முன்பின் பழக்கம் இல்லாதவர்களைக் கூட்டாக வைத்துக் கொண்டால் காரியத்தையே கெடுத்து விடுவார்கள் என்பது செய்தி.

எள்ளுதான் எண்ணைக்குக் காய்கிறது. எலிப் புழுக்கை என்னத்துக்கு காய்கிறது?
பொருள்
ஒன்றுக்கும் உதவாதவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்பவர்கள் மத்தியில் உலவுவது எதற்காக? என்பது செய்தி.

ஒற்றைக் காலில் நிற்கிறான்.
பொருள்
விடா முயற்சியுடன் ஒரு கடினமான செயலைச் செய்பவன் குறித்துச் சொன்னது.
ஒற்றைக் காலில் என்றது அர்ஜுனன் கையால மலை சென்று சிவனைக் குறித்து ஒற்றைக்காலில் பாசுபத அஸ்திரம் வேண்டித் தவம் செய்ததைக் குறிக்கிறது.

பசி வந்தால் பத்தும் பறக்கும்.
பொருள்
 பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் என்றும் இந்தப் பழமொழி வழங்குகிறாது.

பறந்துபோகும் பத்து இவை: மானம், குலம், கல்வி, வண்மை (இங்கிதமான நடத்தை), அறிவுடமை, தானம், முயற்சி, தாணாண்மை (ஊக்கம்), காமம் (ஆசை), பக்தி.

ஐஸ்வர்யா ராய் ஏன் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப் பட்டார் ? அப்துல் கலாம் ஐயாவின் கேள்வியும்,மாணவியின் பதிலும்

ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..
விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..
அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந்த சமயம்..
"ஐஸ்வர்யா ராய் ஏன் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.?"
இந்த கேள்வியை மாணவிகளிடையே வைக்கிறார்..
ஒரு மாணவி "அங்கு வந்திருந்தவர்களில் அவர்தான் அழகாக இருந்தார்" என்கிறாள்..
அவருக்கு பதிலில் திருப்தி இல்லை..
அடுத்த மாணவி "அங்கே கேட்கப்பட்ட கேள்விக்கு அறிவுப் பூர்வமாக சிறப்பான ஒரு பதிலை சொன்னார்"..
அதிலும் அவருக்கு சம்மதமில்லை..
இப்படியே போய்க் கொண்டு இருக்க, அரங்கமே புரிபடாத ஒரு அமைதியில் இருக்கிறது..

உயிருக்கு போராடும் மக்கள்,மனதை வருத்தும் காட்சிகள் - ஜின் கங்கை பெருக்கெடுப்பு

ஜின் கங்கை பெருக்கெடுத்து ஒடுகின்றது,மக்கள் மரக்கிழைகளப்பற்றி பிடித்த வண்ணம் உயிருக்குபோராடும் காட்சி ஒன்று பதிவேற்றப்படிருக்கிறது.
ஒரு வயது முதிர்ந்த ஐயா,மற்றும் ஒரு சிறுவன்,ஒரு நடுத்தரவயது மதிக்கத் தக்க மனிதன் ,மேலும் ஒரு நாய் என்பனவே இவ்வாறான நிலையில் மீட்புக்குளுவினால் மீட்கப்படிருக்கின்றனர்.

மிக மோசமான நிலையில் அந்தரத்தில் நின்றவாறாக சிறுவன் மீட்புக்குளுவை கண்டு கத்து கத்தென்று கத்தியே தம் இருப்பிடத்தை காட்டி இருக்கிறான்.மிகவும் பயந்த நிலையில் சிறுவன் அழுதுகொண்டு இருக்கின்றான்.

நாயுடன் விழையாட்டுக்காட்டி மகிழ்விக்கும் குரங்கு!

குரங்கு என்றால் பிடிக்காதவர்கள் இருக்கமாட்டார்கல்.அவ்வளவுக்கு மனிதர்களை மகிழ்விப்பதில் குரங்குகளின் செயல் கலாட்டா தான்.ஆனால் வீட்டில் கூட நல்ல கலாட்டாவான ஒரு ஆள் இருந்தா அவர் எப்பவும் குரங்கு குரங்கு என திட்டு வாங்கிற்றே இருப்பார்.இந்தக் குரங்கை பாருங்க ..அது ஒரு வித்தியாசமான கலாட்ட பண்ணுது.குரங்குக்கும் மனிசருக்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் இல்லை போல...