புதன், 24 ஜனவரி, 2018

பல்கலைக்கழக மாணவனுடன் ஓடிய சுவிஸ் மனைவி-கணவனும் பிள்ளைகளும் ஏக்கம்!!!

ஆன்ரியின் லீலைக்குள் மாட்டிய பையன்.
தனது கணவனையும் இரு பிள்ளைகளையும் கைவிட்டு விட்டு சுவிஸ்லாந்தில் இருந்த இலங்கை வந்துள்ளார் காரைநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர். 

குறித்த பெண் மிருசுவில் பகுதியைச் சேர்ந்த 24 வயதான கொழும்பு பல்கலைக்ககழகத்தில் கல்விபயிலும் மாணவன் ஒருவனுடன் வைபர் மூலம் தொடர்பில் இருந்ததாகத் தெரியவருகின்றது.
இது தொடர்பாக கணவன் சுவிஸ்லாந்தில், குறித்த பெண்ணுடன் முரண்பட்டு தாக்கியதாகவும், அப்பெண் கணவனை பொலிசாரிடம் சொல்லி கைது செய்து சிறைக்குள் வைத்ததாகவும் தெரியவருகின்றது. கணவன் சிறையிலிருந்து வந்தவுடன் மனைவி தனது பிள்ளையையும் கணவனிடம் விட்டு விட்டு யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

 குறித்த பெண்ணின் சகோதரர்கள் இது தொடர்பாக சந்தேகம் அடைந்து கணவன் பொய் சொல்கின்றார் என நினைத்து கணவன் சொன்ன தகவல்களை வைத்து தனது சகோதரியைத்,தேடிய போது கணவன் சொன்னவை அனைத்தும் உண்மை என அறிந்துள்ளனர்.


தற்போது கணவராலும் பெண்ணின் உறவினர்களாலும் குறித்த பெண்ணை தன்னுடன் வைத்திருக்கும் பல்கலைக்கழக மாணவனுக்கு எதிராக பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.அதாவது தனது மனைவியை குறித்த மாணவன் கட்டாயப்படுத்தி கடத்தி வைத்துள்ளதாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக